இலங்கையில் 137 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களில் 8 பேர், பங்களாதேசில் இருந்து நாடுதிரும்பியவர்களில் இருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் ஒருவர் என 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மேலும் இருவர் வெளியேறியதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 210 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 137 ஆக உள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை